காங்கிரஸ் ஆட்சியில் மோடியை கைது செய்திருப்போம் -ப.சிதம்பரம்

காங்கிரஸ் ஆட்சியில்  மோடியை கைது செய்திருப்போம் -ப.சிதம்பரம்

 காங்கிரஸ் ஆட்சியில் நினைத்திருந்தால் மோடியை கைது செய்திருப்போம் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். 

காங்கிரஸ் ஆட்சியில் நினைத்திருந்தால் மோடியை கைது செய்திருப்போம் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

சிவகங்கை அரண்மனை வாசல் அருகே இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், முதல்வர்களை கைது செய்து விட்டு தேர்தலை நடத்தலாம் என எங்களுக்குத் தோன்றவில்லை. அதில் மோடி பேராசிரியர், நாங்கள் கத்துக்குட்டி என்ற அவர். நாங்கள் ஆட்சி செய்த போது முதல்வர்களை கைது செய்து சிறையில் அடைத்து தேர்தல் நடத்தி இருந்தால், மோடியும் சிறையில் இருந்திருப்பார்.

ஆனால் காங்கிரஸ் கட்சி அதை செய்யவில்லை. எங்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உண்டு. நாங்கள் சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்தவில்லை. ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து விலைவாசி உயர்வு, வேலையின்மையை அதிகரித்த பாஜக அரசு நீடிக்க கூடாது என ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story