குமரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்: விஜய்வசந்த் எம்.பி

குமரி  இடைத்தேர்தலில் காங்கிரஸ்  வெற்றி பெறும்: விஜய்வசந்த் எம்.பி
விஜய் வசந்த் எம்.பி
குமரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என விஜய்வசந்த் எம்.பி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் இன்று நகர்கோவிலில் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- குமரியில் விஜயதரணி எம்.எல்.ஏ. கட்சியை விட்டு சென்று விட்டதால் கட்சி பலவீனம் அடைந்து விடாது. விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். ஏற்கனவே விளவங்கோடு தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏ.வாக போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு விஜயதரணி வெற்றி பெற்றுள்ளார். ஆனால் இங்கு பாதுகாப்பு இல்லை என்று எப்படி கூற முடியும். பா.ஜனதாவை விமர்சித்த விஜயதரணி எப்படி அவர்களை புகழ் பாட முடிகிறது என்று தெரியவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி என்றால் அது காங்கிரஸ்தான். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். பா.ஜனதாவிற்கு தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு இல்லை என்பதற்காக குறை கூறி வருகிறார்கள். ஜி.எஸ்.டி. வரி பிடித்தத்தை கூட மத்திய அரசு கொடுக்காமல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story