காவலர் தேர்வு : 1,012 பேர் ஆப்சென்ட்

காவலர் தேர்வு : 1,012 பேர் ஆப்சென்ட்

காவலர் எழுத்து தேர்வு 

தமிழகத்தில் காவலர், தீயணைப்பு, சிறை காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்துகிறது. அந்த வகையில், இரண்டாம் நிலை காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, தமிழகம் முழுதும் நேற்று முன்தினம் எழுத்து தேர்வு நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், ராஜலட்சுமி பொறியியல் கல்லுாரி, வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரி, ஜேப்பியர் பொறியியல் கல்லுாரி, சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி என, நான்கு கல்லுாரிகளில், நேற்று காவலர் எழுத்து தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கு, ஆண் - பெண் என இருபாலரும் 6,522 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. இந்த தேர்வில், 1,012 பேர் பங்கேற்காத நிலையில், 5,510 பேர் தேர்வு எழுதினர்.

Tags

Next Story