தொகுதி மக்கள் தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் !

தொகுதி மக்கள் தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் !

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் துவங்கவுள்ள நிலையில், முன்னதாக சங்கரன்கோவில் தொகுதி மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என எம்எல்ஏ ராஜா கூறினார். 

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் துவங்கவுள்ள நிலையில், முன்னதாக சங்கரன்கோவில் தொகுதி மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என எம்எல்ஏ ராஜா கூறினார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், ஜூன் 12: தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்க இருப்பதால் சங்கரன்கோவில் தொகுதி மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடா் ஜூன் 20-ம் தொடங்கி நடைபெறவுள்ளது. எனவே சங்கரன்கோவில் தொகுதி பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வியாழக்கிழமை ( ஜூன் 13) முதல் சங்கரன்கோவில்- ராஜபாளையம் சாலையில் நீதிமன்றம் அருகே உள்ள சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நேரடியாகவோ, மின்னஞ்சலிலோ, 9080404049 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலமாகவோ தெரிவிக்கலாம். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற சட்டப்பேரவையில் வலியுறுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

Tags

Next Story