மின்சாரம் பாய்ந்து கட்டிட மேஸ்திரி உயிரிழப்பு

பாலக்கோடு அருகே கட்டிட பணியின் போது மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் அனுமந்தபுரம் சென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்வாணன் மேஸ்திரி. இவர் நேற்று, பாலக்கோடு அருகே உள்ள தண்டுகாரனள்ளி பகுதியில், ஒரு வீட்டில் கட்டுமான பணி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்து தமிழ்வாணன் மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாலக்கோடு துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story