புதிய குளம் உருவாக்கும் பணி தொடக்கம்

புதிய குளம் உருவாக்கும் பணி தொடக்கம்

நத்தம் அருகேயுள்ள பாலப்பநாயக்கன் பட்டியில் புதிய குளம் உருவாக்கும் பணி தொடங்கியது.

நத்தம் அருகேயுள்ள பாலப்பநாயக்கன் பட்டியில் புதிய குளம் உருவாக்கும் பணி தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகேயுள்ள பண்ணுவார்பட்டி ஊராட்சி பாலப்பநாயக்கன் பட்டியில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.9.67 லட்சம் மதிப்பில் புதிய சிறுகுளம் உருவாக்கும் பணி நடந்தது. 100 நாள் 5 வேலை திட்ட பணியாளர்களை கொண்டு வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா மேற்பார்வையில் இந்த பணிகள் தொடங்கபட்டது.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஆண்டிச்சாமி, உதவி பொறியாளர் கணேஷ்பாபு, பணி மேற்பார்வையாளர் அருள்கொடி, ஊராட்சி செயலாளர் கருப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மழை காலங்களில் நீரை சேமிக்கவும், கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்க புதிய குளங்கள் உருவாக்கபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story