கருப்பூரில் அங்கன்வாடி மையம் கட்டும்பணி தொடக்கம்

கருப்பூரில் 14லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டும் பணி தொடங்கியது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள கருப்பூர் பேரூராட்சி கொல்லத் தெருவில் அங்கன்வாடி மைய குழந்தைகள் நலன் கருதி சுமார் 14லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுமான பணிகளை ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பல்பாக்கி கிருஷ்ணன், வெற்றிவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கட்டிடம் கட்டும் கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் விக்னேஷ், ஒன்றிய செயலாளர்கள் அசோகன், எஸ்எஸ்கேஆர் ராஜேந்திரன், கோவிந்தராஜ் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags

Next Story