ஆம்பூர் அருகே மேம்பாலம் அமைக்கும் பணி துவக்கம்

ஆம்பூர் அருகே மேம்பாலம் அமைக்கும் பணி துவக்கம்

போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆம்பூர் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆகிரமிப்பு அகற்றப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை அப்பகுதி மக்கள் கடந்து மற்ற பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளதால், அடிக்கடி நெடுஞ்சாலையில் விபத்துகள் ஏற்பட்டு வந்த நிலையில்,

தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்த நிலையில், மின்னூர் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 34 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி ஓரிரு நாட்களில் தொடங்க உள்ளதால் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றும் பணியில் ஈடுப்படுள்ளனர்.

மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் அசம்பாவிதம் ஏதும் நடக்கமால் இருக்க அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்..

Tags

Next Story