சிவகாசி சிறுகுளம் கண்மாயில் நடைபாதை அமைக்கும் பணிகள் தொடக்கம்

சிவகாசி சிறுகுளம் கண்மாயில் நடைபாதை அமைக்கும் பணிகள் தொடக்கம்
சிவகாசி சிறுகுளம் கண்மாயில் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக நடைபாதை அமைக்கும் பணிகள் தொடக்கம்
சிவகாசி சிறுகுளம் கண்மாயில் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக நடைபாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரையில் நடைபாதை அமைக்கும் பணிகள் மீண்டும் தொடக்கம் மாநகராட்சி நடவடிக்கை.. விருதுநகர் மாவட்டம், சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரையில் ரூ.1கோடி மதிப்பில் நடைபாதை அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது.

சிவகாசியில் சிறுகுளம் கண்மாய் கரை பகுதியில் நடைமேடை அமைக்க சிவகாசி நகராட்சி நுாற்றாண்டு சிறப்பு நிதியில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.கரை பகுதியில் 840 மீட்ட நீளம் 2 அடி அகலம் உள்ள நடைமேடை அமைக்கும் வகையிலும் கண்மாய் உள்ளே கரையை ஒட்டி 5 அடி உயரம் சுவர் எழுப்பி நடைமேடை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

நடைமேடையை சுகாதாரமாக பராமரிக்கும் வகையில் கண்மாய் உள்ளே தடுப்பு வேலிகள், மற்றும் நடைமேடை உள்ளே யாரும் நுழையாதபடி தடுப்பு கம்பிகள் சுற்றிலும் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.இந்த பணிகளுக்காக கடந்த 2022ல் பூமிபூஜை போடப்பட்டது. நிர்வாக காரணமாக பணிகள் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

கவுன்சிலர்களின் தொடர் கோரிக்கை காரணமாக பூமிபூஜை போட்டு சுமார் ஒன்றறை ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரியில் பணிகள் தொடங்கப்பட்டன. பணிகள் நடைபெற்ற ஒருசில தினங்களில் மீண்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

இதனால் கண்மாய் கரை முழுவதும் மீண்டும் திறந்தவெளி கழிப்பறையாக மாறியதோடு குப்பைகளும் கொட்டப்பட்டு வருகின்றது என்றும் பொதுமக்கள் நலன் கருதி நடை மேடை அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் அதனை தொடர்ந்து தற்போது நடைமேடை அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story