புதிய சுகாதார நிலையம் , பள்ளி சுற்றுச்சுவர் கட்டுமான பணி துவக்கம்

புதிய சுகாதார நிலையம் , பள்ளி சுற்றுச்சுவர் கட்டுமான பணி துவக்கம்

புதிய சுகாதார நிலையம் மற்றும் பள்ளி சுற்றுச்சுவர் கட்டுமான பணி

செய்யாறு கிழக்கு ஒன்றியத்தில் புதிய சுகாதார நிலையம் , பள்ளி சுற்றுச்சுவர் கட்டுமான பணியினை எம்எல்ஏ ஒ. ஜோதி துவக்கி வைத்தார்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கிழக்கு ஒன்றியம் காழியூரில் செயல்பட்டு வந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முற்றிலும் பழுதடைந்து உபயோகமற்ற நிலையில் இருந்ததால் தற்பொழுது ரூபாய் 38 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார துணை நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாப்பந்தாங்கல் அரசு உயர் நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் அமைக்க எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்க பூமி பூஜையும் நடத்தப்பட்டது. இரண்டு இடங்களிலும் நடந்த பூமி பூஜையில் எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று கட்டுமான பணியினை துவக்கி வைத்தார்.செய்யாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.ஞானவேல் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர்கள் சரஸ்வதி அருள், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராம்ரவி, தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் மகாராஜன், விளையாட்டு அணி துணை அமைப்பாளர் ஞான முருகன், மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன், பார்த்திபன், ஒன்றிய துணை செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய பொருளாளர் அருள், அறிவழகன்,ராமஜெயம் ஒப்பந்ததாரர் கதிரவன், செவிலியர் ஜெயந்தி, உள்ளிட்ட அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story