புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் துவக்கம்

புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் துவக்கம்
புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் துவக்கம்
செங்கல்பட்டு மாவட்டம், கன்னியப்பன் நகரில் புதிய தார் சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டது.
நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, எட்டாவது வார்டுக்கு உட்பட்ட கன்னியப்பன் நகர் பிரதான சாலை சேதமாகி, மக்கள் பயன்பாட்டிற்கு லாயக்கற்ற முறையில் இருந்தது. இது குறித்து, எட்டாவது வார்டு தி. மு. க. , கவுன்சிலர் குமரவேல், நகராட்சி கமிஷனர் தாமோதரன் மற்றும் தலைவர் கார்த்திக் ஆகியோருக்கு புகார் மனு அளித்திருந்தார். அதன்பின், சாலையை சீரமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு, நேற்று புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன.

Tags

Next Story