தார்சாலை அமைக்கும் பணி துவக்கம்

இராமியன அள்ளி ஊராட்சி பகுதியில், ரூ. 14.72 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணி துவங்கியது.

இன்று தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,இராமியன அள்ளி ஊராட்சி பகுதியில், ரூ14.72. லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணியை,பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி இன்று காலை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகள் உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் மற்றும் தார் சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஊர் முக்கியஸ்தர்கள் உட்பட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



Tags

Next Story