மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பாதைகள் அமைக்கும் பணி

மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பாதைகள் அமைக்கும் பணி
மெட்ரோ 
மேம்பால இணைப்பு பணிகள் முடிந்துள்ள இடங்களில் பாதைகள் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளன.
சோழிங்கநல்லுார் - மாதவரம் மெட்ரோ வழித்தடத்தில் மேம்பால இணைப்பு பணிகள் முடிந்துள்ள இடங்களில் பாதைகள் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளன.சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மாதவரம் --- சோழிங்கநல்லுார் தடத்தில் உள்ள 46 மெட்ரோ ரயில் நிலையங்களில் 42 ரயில் நிலையங்கள் மேம்பால பாதையில் அமைகின்றன. இந்த தடத்தில் பெரும்பாலான இடங்களில் மேம்பால பாதையில் ரயில் நிலையங்கள் அமைய உள்ளதால் பணிகள் தாமதம் இன்றி நடக்கின்றன. பணிகள் தாமதம் இன்றி நடக்கவும் பணிகளின் நிலவரத்தை உடனுக்குடன் கண்காணித்து அறிக்கையை சமர்ப்பிக்க சிறப்பு அதிகாரிகளையும் நியமித்து உள்ளோம். மாதவரம், ரெட்டேரி, கொளத்துார் சந்திப்பு பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. எனவே இந்த இடங்களில் விரைவில் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பாதைகள் அமைக்கும் பணியை துவங்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story