அவனியாபுரத்தில் வாடிவாசல் அமைக்கும் பணி தொடக்கம்

அவனியாபுரத்தில் வாடிவாசல் அமைக்கும் பணி தொடக்கம்

வாடிவாசல் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதியில் வாடிவாசல் அமைக்கும் பணி தொடங்கியது.

மதுரை அவனியாபுரத்தில் தமிழர் திருநாளாம் தை திருநாளன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம், ஜல்லிக்கட்டு போட்டிக்காக வாடிவாசல் அமைக்கும் பணியில் பரம்பரை வாடிவாசல் அமைப்பாளர்கள் வாடிவாசல் பகுதியில் இன்று தென்னங்கட்டைகளை ஊண்டி வாடிவாசல் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவனியாபுரத்தை சேர்ந்த வாடிவாசல் அமைப்பாளர்கள் இருளன், ஜெயக்குமார் மற்றும் அவரது வாரிசுகள் வாடிவாசல் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 10 அடி மற்றும் 8 அடி உயரமுள்ள தென்னை மரத்தை சுற்றிலும் பாதுகாப்பாக நட்டு அதன் பின் வாடிவாசல் கதவுகள் அமைக்கப்படும்.

வாடிவாசல் அமைக்கும் பணிக்காக சுமார் 23 தென்னங்கட்டைகள் கொண்டுவரப்பட்டு தற்போது ஊண்டப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியினை மதுரை மாநகராட்சி சார்பாக நடத்தப்படுவதால் ஜல்லிக்கட்டு போட்டிக்காக ரூ.28 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வேலைகள் துரிதப் பணியில் நடந்து வருகிறது.

Tags

Next Story