கன்னியாகுமரி அருகே கட்டிட தொழிலாளி மர்ம சாவு

கன்னியாகுமரி அருகே கட்டிட தொழிலாளி மர்ம சாவு

விசாரணை

கன்னியாகுமரி அருகே கட்டிட தொழிலாளி மர்ம சாவு. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
கன்னியாகுமரி அருகே சுவாமிநாதபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (52) கட்டிடத் தொழிலாளி. நேற்று மாலை பழத்தோட்டம் முருகன் கோயில் அருகே மயங்கிய நிலையில் கிடந்தார். இவரை பார்த்த பகுதியினர் கன்னியாகுமரி போலீஸ் நிலையம் மற்றும் 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்தனர். உடனே ஆம்புலன்ஸ் பணியாளர்கள் விரைந்து வந்து அவரை பரிசோதித்தனர். அப்போது சுரேஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சுரேஷ்குமார் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சுரேஷ் குமார் இறப்பிற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே அதிக குடிபோதையில் மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு உறுதியாக கூற முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது இது தொடர்பாக சுரேஷ்குமார் சகோதரர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story