திருப்பூரில் கட்டுமான தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம்

திருப்பூரில் கட்டுமான தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம்

காட்டுமான தொழிலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

திருப்பூரில் கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு குறைகளை கேட்டு அறிந்தார்.

திருப்பூரில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார்.

திருப்பூர் மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் கலந்து கொண்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்களுடைய குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

பெரும்பாலான தொழிலாளர்கள் பென்சன் தொகை கிடைப்பதில் காலதாமதம் மற்றும் புதிதாக பென்ஷன் விண்ணப்பம் செய்பவர்கள் மனுக்கள் தாமதமாவது குறித்து கோரிக்கையை முன்வைத்தனர். தொழிலாளர் நல வாரியத்தின் சார்பில் அனைத்து திட்டங்களும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கிடைக்கக்கூடிய வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் கடந்த சில மாதங்களாக இருந்த சர்வர் பிரச்சனை விரைவில் சரி செய்யக்கூடும் எனவும் தெரிவித்தார்.

Tags

Next Story