திருப்பூருக்கு அமைச்சர் உதயநிதி வருவதை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம்

திருப்பூருக்கு வரும் 11ம் தேதி, அமைச்சர் உதயநிதி வருகை தருவதை எம்.எம்.ஏ., செல்வராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ்MLA தலைமையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வென்றெடுப்பது தொடர்பாகவும்,வருகின்ற பிப்ரவரி 11 ஞாயிற்றுக்கிழமை அன்று, நான்காவது குடிநீர் திட்ட துவக்க விழாவிற்கு,மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் வருகை தர உள்ளதை முன்னிட்டு கழக நிர்வாகிகள் மற்றும் மக்களுடன் பெருந்திரளாக விழாவில் கலந்து கொள்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார் , தெற்கு மாநகர செயலாளர் டி கே டி மு‌‌‌நாகராசன் , மாவட்ட அவைத் தலைவர் நடராஜன் , நகர,பகுதி, ஒன்றிய கழக செயலாளர்களும், மகளிர் அணி நிர்வாகிகளும், மாவட்ட மாநகர நிர்வாகிகளும் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story