செங்கல்பட்டு எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை கூட்டம்

செங்கல்பட்டில் எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் தலைமையில்,தொகுதி பொறுப்பாளர் M.S நாதன்,காட்டாங்குளத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் உதயா கருணாகரன், காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் P.சந்தானம்,காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் M.D.லோகநாதன், காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் முன்னிலையில், ஒன்றியத்தில் அடங்கிய ஊராட்சிகளில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் க. செல்வம் அவர்களின் வருகையையொட்டி கலந்தாலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பல்வேறு அணிகளின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள்,ஒன்றிய நிர்வாகிகள், கழக முன்னோடிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் கிளைக் கழகச் செயலாளர்கள், மாணவர் அணி, இளைஞரணி, மற்றும் மகளிர் அணி ,தகவல் தொழில்நுட்ப அணி பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story