தர்மபுரியில் முதல்வர் நிகழ்ச்சி குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முதல்வர் வருகை முன்னிட்டு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடுமுதலமைச்சர் முக.ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட பணிகள் மற்றும் அரசு விழாவில் கலந்து கொள்ள வருவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் அமைச்சர் முனைவர். பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

Tags

Next Story