வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்!

திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் குடிநீர் திட்டப் பணிகள், சாலைப் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் முன்னிலையில் இன்று மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் குடிநீர் திட்டப் பணிகள், சாலைப் பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள், கழிவு நீர் கால்வாய், மழைநீர் வடிகால், தெருவிளக்கு ஆகிய பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர்கள் உமாமகேஸ்வரி, கோவிந்தராஜ், கோவிந்தசாமி, தலைமை பொறியாளர் திருமாவளவன், துணை ஆணையாளர்கள் சுந்தர்ராஜ், சுல்தானா உட்பட பலர் உள்ளனர்...

Tags

Next Story