சீரான குடிநீர் வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டம்!

சீரான குடிநீர் வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டம்!

ஆலோசனை கூட்டம் 

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் சீரான குடிநீர் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

வேலூர் மாவட்டத்தில் கோடைகாலத்தில் பொது மக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் லட்சுமி பிரியா தலைமையில் வேலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லட்சுமி பிரியா பேசுகையில்,"பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகத்தை அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து உறுதி செய்ய வேண்டும். மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை சுத்தமாக முறையாக பராமரிக்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் பொதுமக்களுக்கு குடிநீர் வைக்க வேண்டும். பொதுமக்கள் அமர நாற்காலி வசதி ஏற்படுத்த வேண்டும்,"என கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story