கலைஞர் கனவு இல்ல பயனாளிகள் தேர்வு குறித்து ஆலோசனை கூட்டம்

கலைஞர் கனவு இல்ல பயனாளிகள் தேர்வு குறித்து ஆலோசனை கூட்டம்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

தலைவாசல் அருகே கலைஞர் கனவு இல்ல பயனாளிகள் தேர்வு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியத்தில் தலைவாசல், பட்டுத்துறை, நாவக்குறிச்சி, சிறுவாச்சூர், வரகூர், வேப்பநத்தம், ஊனத்தூர் உள்பட 35 ஊராட்சிகள் உள்ளன. இந்த 35 ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து தமிழக அரசின் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் தலைவாசல் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. தலைவாசல் ஒன்றிய ஆணையாளர் வெங்கடேசன்,

தலைவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் ஆகியோர் தலைமை தாங்கினர்.கூட்டத்தில் தமிழக அரசின் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்து குறித்து அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் 35 ஊராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், துணை வட்டார வளர்ச்சிஅலுவலர் செந்தில் ஆகியோர் தலைமை தாங்கினர்.கூட்டத்தில்,

தமிழக அரசின் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்து குறித்து அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் 35 ஊராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள்,

துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், ஒன்றிய மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story