ஆட்சியர் தலைமையில் தேர்தல் பிரிவு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்

ஆட்சியர் தலைமையில் தேர்தல் பிரிவு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்

தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் மற்றும் பரிசீலனை முடிந்த நிலையில் தேர்தல் பிரிவு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.


தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் மற்றும் பரிசீலனை முடிந்த நிலையில் தேர்தல் பிரிவு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024ஐ முன்னிட்டு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேட்புமனு தாக்கல் மற்றும் பரிசீலனை முடிந்த நிலையில் அடுத்த கட்ட தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து தேர்தல் பிரிவு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி.அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பிரகாசம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) அருண்மொழித்தேவன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆர்.காயத்ரி, தருமபுரி வட்டாட்சியர்பி.ஜெயசெல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story