மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனை கூட்டம்

நாடாளுமன்ற தேர்தலைன் முன்னிட்டு தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அச்சக, திருமண மண்டப உரிமையாளர்ளுக்கு ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமை யாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள், வட்டிக்கு விடுவோர் மற்றும் நகை அடகு பிடிப்போர்களுக்கு தேர்தல் நடத்தை விதி முறைகள் தொடர்பான அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர். ஏ. கே. கமல் கிஷோர் தலைமை தாங்கி அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள், வட்டிக்கு விடுவோர் மற்றும் நகை அடகு பிடிப்போர் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

Tags

Next Story