கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல்லில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திமுக கூட்டணி வைக்கும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நாமக்கல்- மோகனூர் சாலை முல்லை நகரில் உள்ள கிழக்கு மாவட்ட அலுவலகம் கலைஞர் அறிவாலயத்தில் பேராசிரியர் அரங்கில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவருமான கே ஆர் என் ராஜேஸ்குமார் தலைமையில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம். மதுரா செந்தில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் முன்னிலையிலும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் (கொமதேகவின்) நாடாளுமன்ற வேட்பாளர் சூர்ய மூர்த்தி அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சங்ககிரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கா. சுந்தரம், நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பீ.ஏ.சித்திக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் வி.எஸ்.மாதேஸ்வரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் மும்பை அர்ஜுனன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் எஸ்.சேகர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் முஹம்மது முபின், நாமக்கல் கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மைய செயலாளர் ஜெயபிரகாஷ், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் காமராஜ், மத்திய மாவட்ட செயலாளர் ஆதம் ஃபரூக், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுல்தான் பாஷா, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் சக்திவேல், ஆதித்தமிழர் பேரவை கட்சி மாவட்ட செயலாளர் மணிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினாா். மேலும், தோ்தல் பணிகளை இணைந்து மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

Tags

Next Story