புதுமைப்பெண் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்

புதுமைப்பெண் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் புதுமைப்பெண் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. 

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் புதுமைப்பெண் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புதுமைப்பெண் திட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கல்லூரி கல்வி இணை இயக்குனர் மலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜமால் மொய்தீன், கல்லூரிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதை கல்லூரிகள் உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.

Tags

Next Story