நுகர்வோர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

நுகர்வோர் தின  விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு பேரணி 

உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு மேட்டுகடை வி.எஸ்.வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
குண்டடத்தை அடுத்து மேட்டு கடையில் செயல்பட்டு வரும் வி.எஸ்.வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பாக நுகர்வோர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பள்ளி தாளாளர் சுப்ரமணியம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் சந்திரிகா முன்னிலை வகித்தார். இதில் பள்ளி மாணவ மாணவிகள் உங்கள் குரல், உங்கள் பாதுகாப்பு குறித்த வாசகங்கள் எழுதி அட்டைகளை கையில் ஏந்தியும் கோஷமிட்டபடி பள்ளியில் தொடங்கிய பேரணி, மேட்டுக்கடை பஸ் நிறுத்தம் மற்றும் ஆட்டோ ஸ்டாண்ட் வழியாக மீண்டும் பள்ளியை சென்றடைந்தது. இதில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், உடற்பயிற்சி ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story