திடீரென தீப்பிடித்த கன்டெய்னர் - ராணிப்பேட்டையில் பரபரப்பு!

திடீரென தீப்பிடித்த கன்டெய்னர் -  ராணிப்பேட்டையில் பரபரப்பு!

தீ விபத்து 

ராணிப்பேட்டை அருகே பல லட்சம் மதிப்புள்ள கார்களை ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாசிக் பகுதியில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு விலை உயர்ந்த கார்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி வாலாஜாபேட்டை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது அம்மணதாங்கள் பகுதி அருகே உள்ள நாமக்கல் பெட்ரோல் பங்க் அருகில் ஓட்டுநர் சோனு யாதவ் லாரியை நிறுத்திவிட்டு உணவு அருந்த சென்றபோது திடீரென லாரியின் முன்பக்க இஞ்சின் முழுவதும் தீ மனவளவென பரவி எரியத் தொடங்கியது.

இதனை அடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறை மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியோடு எரிந்து கொண்டிருந்த தீயினை போராடி அணைத்தனர். தீயை அணைத்ததால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார்கள் தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்டது.

Tags

Next Story