கண்டெய்னர் லாரி திடீர் பழுது, சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

கண்டெய்னர் லாரி திடீர் பழுது, சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னையில் கண்டெய்னர் லாரி திடீர் பழுதாகி நின்றதால், சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


சென்னையில் கண்டெய்னர் லாரி திடீர் பழுதாகி நின்றதால், சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து, மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு, கன்டெய்னர் லாரி ஒன்று திருப்போரூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகே ஜி.எஸ்.டி., சாலையில் சென்ற போது, பின்பக்க டயர் திடீரென்று பஞ்சரானது. கன்டெய்னரில் அதிகமான பாரம் இருந்ததால், தொடர்ந்து வாகனத்தை இயக்க முடியாமல் டிரைவர் அவதியடைந்து, சாலையிலேயே நிறுத்திவிட்டார். இதனால், ஜி.எஸ்.டி., சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து, பழுதை சரிசெய்த பின், கன்டெய்னர் லாரி புறப்பட்டது. இதனால், காலை முதல் மதியம் வரை, பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீசார், தற்காலிக தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்

Tags

Next Story