தொடர் விடுமுறை: பழனியில் பக்தர்கள் கூட்டம்

தொடர் விடுமுறை: பழனியில் பக்தர்கள் கூட்டம்

கோவிலில் பக்தர்கள் கூட்டம் 

தொடர் விடுமுறை காரணமாக பழனியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தொடர் விடுமுறை காரணமாக பழநி முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்தனர்.

ஐயப்ப பக்தர்கள் வருகையும் அதிகரித்தது. பொது, கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். வின்ச், தரிசன வரிசையிலும் பக்தர்கள் பல நேரம் காத்திருந்து டிக்கெட் பெற்றனர்.ரோடுகளில் ஆக்கிரமிப்பால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

கோயில் நிர்வாகம்,நகராட்சி, வருவாய் துறையினர் இணைந்து தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை செய்து வந்தால் மட்டும் கட்டுப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story