அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம்

அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

அரியலூர் கலெக்டர் அலுவலக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்துறை ஊழியர்கள்.

தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் 2 வது நாளாக இன்று நடைப்பெற்றது.

இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என வலியுறுத்தபட்டது.

மேலும் அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கான, புதிய துணை வட்டாச்சியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தபட்டது. இதில் அச்சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story