சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம்

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்

தர்மபுரியில் சிபிஎஸ் ஒழிப்பு சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

வியாழக்கிழமை மதியம் 2 மணி அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம். இந்தப் போராட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் தலைமை வைத்தார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி முன்னிலை வைத்தனர் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி கோரிக்கை விளக்க உரை ஆற்றினார்.

இதில் கோரிக்கைகளை மற்றும் வாக்குறுதி அளிக்காத ராஜஸ்தான், ஜார்கண்,ட் சட்டிஸ்கர் போன்ற மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதிப்படி பஞ்சாப் ,ஹிமாச்சல் பிரதேசம் கர்நாடகம் மற்றும் சிக்கிமில் வெற்றி பெற்ற பின் உடனடியாக புதிய ஓய்வுதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் ,திமுகவின் 2021 சட்டமன்றத் தேர்தல் கால வாக்குறுதி எண் 309 படி சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

Tags

Next Story