குற்றால அருவிகளில் தொடர் வெள்ளப்பெருக்கு

குற்றால அருவிகளில் தொடர்  வெள்ளப்பெருக்கு

குற்றால அருவி 

தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் தொடா்ந்து வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் 4-ஆவது நாளாக குளிக்கத் தடைநீட்டிக்கப்பட்டது. குற்றாலம் பகுதியில் பெய்த கனமழையால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஐந்தருவியில் மட்டும் நீா்வரத்து குறைந்ததையடுத்து அங்கு குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனா். மற்ற அனைத்து அருவிகளிலும் தண்ணீா் வரத்து குறையாததால் 4-ஆவது நாளாக குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.

Tags

Next Story