தொடர் மின் தடை : பராமரிப்பு பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள்

தொடர் மின் தடை : பராமரிப்பு பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள்
பராமரிப்பு பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள்
கூடுவாஞ்சேரி நகராட்சி பகுதியில் தொடர் மின் தடை ஏற்பட்டு வந்த நிலையில் மின்வாரிய ஊழியர்கள் பராமரிப்பு பணி மேற்கொண்டு சீரான மின் விநியோகத்தை உறுதி செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம்,நந்திவரம், கூடுவாஞ்சேரி நகராட்சி, குபேரன் நகர் அருகில் சில நாட்களாக அவ்வப்போது மின் தடை ஏற்பட்டது. இதை தொடர்ந்து, அப்பகுதி மக்களின் புகாரின் அடிப்படையில், கூடுவாஞ்சேரி மின் வாரிய உதவி செயற் பொறியாளர் உத்தரவின்படி,மின்வாரிய ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது,சுட்டெரிக்கும் வெயில் காரணமாக, மின் ஒயர்கள் மற்றும் மின் கம்பிகள் தீப்பிடித்தது தெரிய வந்தது. இதனால் ஏற்படும் மின்தடையை தடுக்கும் விதமாக,சுற்றுவட்டார பகுதிகளில் சேதமானமின் கம்பிகள் மற்றும் மின் ஒயர்களை பராமரிப்பு பணிகளில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Tags

Next Story