கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை

கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை

கொடைக்கானலில் மழை 

கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 4 வது நாளாக தொடரும் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது, இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் பிற்பகல் வேளையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது, குறிப்பாக மூஞ்சிக்கல், ஆனந்தகிரி, உகார்த்தேநகர், சீனிவாசிபுரம்,பேருந்து நிலையம்,அண்ணாசாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும், பெருமாள்மலை,வில்பட்டி,பள்ளங்கி, பேத்துப்பாறை உள்ளிட்ட மலைக்கிராம பகுதிகளிலும் மழை பெய்தது, மழை தொடர்ந்து பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது, மேலும் மழை தொடர்வதால் நீரோடைகள், அருவிகளில் தண்ணீர் அதிகரித்து காணப்படுகிறது, மலைப்பகுதியில் 4வது நாளாக மழை தொடர்வதால் குளுமையான சூழல் நிலவி வருகிறது.

Tags

Next Story