விருதுநகரில் தொடர்ந்து பெய்து வரும் மழை

விருதுநகரில் தொடர்ந்து பெய்து வரும் மழை

விருதுநகரில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  

விருதுநகரில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
விருதுநகர், தேனி தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை தொடர்ந்து விருதுநகரில் மிதமான கனமழை பெய்து வருகிறது. விருதுநகர் ஆட்சியர் அலுவலகம், அல்லம்பட்டி, சூலக்கரை, பாண்டியன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாலையின் பல்வேறு இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழையளவு மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் மாவட்டம் முழுவதும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story