மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி பலி

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி பலி
மின்சாரம் தாக்கி பலி
சேலம் மாவட்டம்,மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேட்டூர் அருகே உள்ள காவேரி காவேரி கிராஸ் சேர்ந்தவர் ராக்கியண்ணன் மகன் மோகன்ராஜ் (25). மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று டர்பைன் பகுதியில் பெயிண்டிங் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மோகன்ராஜ் உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெயிண்டர் மோகன் ராஜிக்கு திருமணம் ஆகவில்லை. உயிரிழந்த மோகன்ராஜ் குடும்பத்தாருக்கு நிவாரணம் கேட்டு சடலத்தை மேட்டூர் அனல் மின் நிலையத்திலிருந்து . மருத்துவமனைக்கு கொண்டு செல்வதை உறவினர்கள் தடுத்ததால் ஒப்பந்ததாரருடன் உறவினர்கள் சிலர் பேச்சு நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதால் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு வேத பரிசோதனைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது . இச்சம்பவம் தொடர்பாக கருமலைக் கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story