பள்ளிவாசல் குறித்து சர்ச்சை கருத்து: மாஜி விமானப்படை அதிகாரி கைது

பள்ளிவாசல் குறித்து சர்ச்சை கருத்து: மாஜி விமானப்படை அதிகாரி கைது

கோப்பு படம் 

பொட்டல்புதூர் பள்ளிவாசல் குறித்து சமூகவலை தளத்தில் சர்ச்சை கருத்து பதிவிட்ட மாஜி விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் பகுதியில் உள்ள பழமையான முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் குறித்து சமூக வலைதளங்களில் மர்ம நபர்கள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்த அசன்மைதீன் கொடுத்த புகாரின் அடிப்படையில்,

தென்காசி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்திருந்த சென்னை கொட்டிவாக்கம் சுவாமிநாதன் நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாச சுப்பிரமணியன் என்பவரை தென்காசி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

கைதான சீனிவாச சுப்பிரமணியன் முன்னாள் விமானப்படை அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story