சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதி திடீர் சாவு
![சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதி திடீர் சாவு சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதி திடீர் சாவு](https://king24x7.com/h-upload/2024/02/12/391191-image3a1000113223.webp)
சிறைச்சாலை
சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதி திடீரென பலியாகினர்.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (36). இவர் வெண்ணந்தூர் போலீஸ் நிலைய அடி-தடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாார்.
அவஇந்த நிலையில் கல்லீரல் மற்றும் கணையம் வீக்கத்தால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 1-ந் தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை 6.20 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த போன மோகன்ராஜிக்கு, சசிபிரியா என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர்.
Tags
Next Story