மதர் தெரசா கலை அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

மதர் தெரசா கலை அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

 பட்டமளிப்பு விழா

இலுப்பூர் மதர் தெரசா கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 800 மாணவர்கள் பட்டம் பெற்றனர்,

இலுப்பூர் மேட்டுச்சாலை மதர் தெரசா கலை, அறிவியல் கல்லுாரியில் 11வது பட்டமளிப்பு விழா நடந்தது. நிறுவனர் சின்னத் தம்பி தலைமை வகித்தார். தாளாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார். இயக்குனர் பூங்குன்றன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திருமலை சாமி 800 மாணவர்களுக்கு பட்டங்களையும், பல்கலைக்கழக தேர்வுகளில் பல்வேறு துறைகளில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நினைவுப்பரிசும் வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் மதர்தெரசா கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள்,அலுவலர்கள், பெற்றோர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர்.கல்லூரி முதல்வர் நல்லதம்பி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை துணை முதல்வர் தாமோதரன் செய்திருந்தார்.



Tags

Next Story