வட்டாட்சியர் அலுவலகத்தில் கொட்டும் மழையில் சமையல் செய்து போராட்டம்

வட்டாட்சியர் அலுவலகத்தில் கொட்டும் மழையில் சமையல் செய்து போராட்டம்

போராட்டம் 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பனிக்கனேந்தல் கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் ராஜாவை நேரில் சந்தித்து பனிக்கனேந்தல் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை அகற்றக் கோரியும், அரசு விதிமுறையை மீறி மேய்ச்சல் நிலத்தில் அசைன்மென்ட் பட்டா வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் நீடித்த இப்போராட்டத்தில், கொட்டும் மழையில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பெண்கள் சமையல் செய்து வந்த நிலையில், வட்டாட்சியர் ராஜா போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story