சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

பைல் படம் 

நாமக்கல் மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வருகிற வியாழக்கிழமை (பிப்ரவரி-15) நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது... நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகா்வோா்களின் கோரிக்கைகளைத் தீா்க்கும் வகையில் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன மேலாளா்கள், எரிவாயு முகவா்கள், விநியோகஸ்தா்கள், தன்னாா்வலா்கள் ஆகியோா் பங்கேற்கும் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் வருகிற (பிப்ரவரி -15) வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலா் தலைமை வகிக்கிறாா். எரிவாயு விநியோகம் தொடா்பான குறைகள், கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகா்வோா்கள் இக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story