வரும் 3ம் தேதி கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் 'ஸ்டிரைக்'

வரும் 3ம் தேதி கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் ஸ்டிரைக்

தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 3ம் தேதி, தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தம் செய்கின்றனர். 

தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 3ம் தேதி, தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பவதாவது:- தமிழகத்தில் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் வரும் விற்பனையாளர்கள் குறைவான சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே தற்போது பிறப்பித்துள்ள புதிய உத்தரவால் விற்பனையாளர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகுவதுடன், முறைகேடுகளுக்கும் காரணமாக அமைய வாய்ப்புள்ளது.

எனவே இந்த புதிய உத்தரவை விலக்கி கொண்டு முந்தைய உத்தரவையே தொடர அனுமதிக்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 3-ந் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது. அதன்பிறகும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாத பட்சத்தில் ஜூலை மாதம் 8-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் போராட்டத்துக்கு இடமளிக்காமல் தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்படுத்தி விற்பனையாளர்களின் இன்னல்களை களைய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story