ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம். 

ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம். 
ஆரல்வாய்மொழியில் ஆர்ப்பாட்டம்
ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்கள் எழுப்பினர்

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாளையும் தொழிலாளர்களின் பணி நேரத்தை அதிகரிப்பதை கண்டித்து அனைத்து தொழிற்சங்க சார்பில் நூற்பாலை முன்பு ஒரு நாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர்களுக்கு அதிகமாக ஒரு மணி நேரம் வேலை சுமை வழங்கபட்டு வருவதாகவும், இது சம்பந்தமாக எந்தவித பேச்சுவார்த்தை நடத்த முன் வராத நிலையில், தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே தமிழக அரசு கூட்டுறவு நூற்பாலை செயல்படுவதற்கு தேவையான மூலப்பொருட்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நடந்த பேராட்டத்துக்கு சிஐடியு சங்க செயல் தலைவர் சக்திவேல், தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் மகாராஜா பிள்ளை, அண்ணா தொழிற்சங்க தலைவர் ஜாமீன் ஜெயக்குமார் ஆகியோர் தலைமை வைத்தனர்.

அண்ணா தொழிற்சங்க செயலாளர் மாசாணம், அரசு தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் ரவிச்சந்திரன், சிஐடியு தொழிற்சங்க பொதுச் செயலாளர் வடிவேல் குமார் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story