கல்லூரிக்கனவு நிகழ்ச்சி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம்

கல்லூரிக்கனவு  நிகழ்ச்சி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம்

ஒருங்கிணைப்பு கூட்டம் 

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்லூரிக்கனவு என்ற நிகழ்ச்சியின் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக கல்லூரிக்கனவு என்ற நிகழ்ச்சியின் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இஆப., தலைமையில் இன்று நடைபெற்றது.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சையது முகைதின் இப்ராகிம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஐ.ஜோதி சந்திரா, உதவி இயக்குநர் (பயிற்சி) பன்னீர் செல்வம், மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கே.கண்ணன், தருமபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் கண்ணன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story