திருப்பூரில் திமுக கட்சியின் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்

திருப்பூரில் திமுக மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் நாடாளுமன்ற வேட்பாளர் வெற்றி பெறுவது குறித்து பொறுப்பாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

திருப்பூரில் இந்திய கூட்டணியின் நாடாளுமன்ற வேட்பாளர் சுப்பராயன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது குறித்து அண்ணா காலனி பகுதி மற்றும் கொங்கு நகர் பகுதி கழகத்திற்கு உட்பட்ட BLA2 பொறுப்பாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் வடக்கு மாநகர செயலாளர் ,மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வடக்கு தொகுதி தேர்தல் பொறுப்பாளர் திராவிட மணி, பகுதிகழக செயலாளர் மின்னல் நாகராஜ், போலார் சம்பத், வட்ட கழக செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story