நாகர்கோவிலில் மாநகராட்சி கூட்டம் நடந்தது 

நாகர்கோவிலில் மாநகராட்சி கூட்டம் நடந்தது 
நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம்
நாகர்கோவிலில் மாநகராட்சி கூட்டம் நடந்தது 

குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று மேயர் ரெ.மகேஷ் தலைமையில் நடைப்பெற்றது. மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலை வகித்தார்.

மற்றும் துணை மேயர் மேரி பிரின்ஸி லதா உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியிலுள்ள அடிப்படை தேவைகள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் வலம்புரிவிளை குப்பை கிடங்கு பிரச்சனை, தெருநாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளும் , ஆறு வார்டுகளுக்கு 24 × 7 மணி நேர குடிநீர் விநியோகம் வழங்கும் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக ஒழுகினசேரி இரயில்வே பாலம் பணியை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றிய தென்னக இரயில்வே துறைக்கு மாநகராட்சி சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story