அரூரில் ரூ.44 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர் சங்கத்தில் நடந்த ஏலத்தில் ரூ.44 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது.
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி அரூர் முதல் திருப்பத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தமிழக அரசின் உழவர் நலன் மற்றும் வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர் சங்கம், இங்கு நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் சுமார் 316 விவசாயிகள் 1480 பருத்தி மூட்டைகளை கொண்டு வந்தனர். மேலும் ஆர்சிஎச் ரகம் குவிண்டால் 6, 466 முதல் 7, 396 வரைக்கும் DCH ரகம் 6, 769 முதல் 7, 589 வரை விற்பனையானது. நேற்று மாலை வரை நடைபெற்ற ஏலத்தில் 44 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனதாக சங்க செயலாளர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story