மூலனூரில் ரூ.1.25 கோடிக்கு பருத்தி ஏலம் 

மூலனூரில் ரூ.1.25  கோடிக்கு பருத்தி ஏலம் 

பைல் படம் 

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த மறைமுக ஏலத்தில் ரூ.1.25 கோடிக்கு பருத்தி விற்பனையானது.

திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 492 பேர் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.

இதில் வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.8,366-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.6,550-க் கும். சராசரி விலையாக ரூ.7,550-க்கும் விற்பனையானது. பருத்தியின் மொத்த அளவு 5361 மூட்டைகள், குவிண்டால் 1693.94. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 25 லட்சத்து 46 ஆயிரத்து 554 ஆகும். 17 வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். இந்த தகவலை திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் (பொறுப்பு) தர்மராஜ் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

Tags

Next Story