புளி இடித்து பெண்களிடம் வாக்கு சேகரித்த ஒன்றிய கவுன்சிலர்

புளி இடித்து பெண்களிடம் வாக்கு சேகரித்த ஒன்றிய கவுன்சிலர்

லால்குடி அருகே மால்வாய் ஊராட்சியில் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதாரித்து புளி இடித்து பெண்களிடம் ஒன்றிய கவுன்சிலர் செந்தாமரை கண்ணன் வாக்கு சேகரித்தார்.

லால்குடி அருகே மால்வாய் ஊராட்சியில் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதாரித்து புளி இடித்து பெண்களிடம் ஒன்றிய கவுன்சிலர் செந்தாமரை கண்ணன் வாக்கு சேகரித்தார்.

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடி ஒன்றியத்தில் திமுக நிர்வாகிகள் வாக்குகள் சேகரித்து வருகின்றனர். திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் கூட்டணி சார்பில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து திமுக நிர்வாகிகள் வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக புள்ளம்பாடி அருகே மால்வாய் ஊராட்சியில் திமுக நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர். அப்போது ஒன்றிய கவுன்சிலர் செந்தாமரை கண்ணன் புளி இடித்து பெண்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்தார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் புள்ளம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட திமுக நிர்வாகிகள் இளைஞரணியினர் தகவல் தொழில்நுட்ப அணியினர் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story